கற்றாழை கடவுள் நமக்குக் கொடுத்த, ஒரு மருத்துவக் குணம் நிறைந்த, உடலின் பல்வேறு பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடிய, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்தப் பொருள். உச்சி முதல் பாதம் வரை நம்மை அழகுப்படுத்திக்கொள்ளவும், உடலை பராமரிக்கவும் உதவும் ஒரே பொருள் என்றால், அது கற்றாழை தான்.அதன் நன்மைகளை இந்தப் பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.

கற்றாழையின் பலனை ருசித்தவர்கள் அனைவருமே, எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியமான முறையில் அழகை அதிகரிக்க இதை விட வேறு ஒரு சிறந்தப் பொருள் எதுவுமே இல்லை என்கிறார்கள்.அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதிலுள்ள குளிர்ச்சித் தன்மை, சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் மறையச் செய்கிறது.
இது நமக்குப் பல வகைகளில் உதவுகிறது.இதன் பயன்களில் சிலவற்றை பார்க்கலாம்.

கூந்தல் பிரச்சனை
ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் ஒரே பொருள், அது கற்றாழை மட்டும்தான். கற்றாழையில் இருக்கும் முட்களை நீக்கி, தோலை சீவி உள்ளிருக்கும் ஜெல்லை எடுத்து, தலையின் வேர்ப்பகுதிகள், நுனிகள் என அனைத்துப் பகுதியிலும் தேய்த்து, ½ மணி நேரம் ஊற வைத்தி பின்பு கூந்தலை அலச வேண்டும்.இப்படி மாதம் இருமுறை இதே போல செய்து வந்தால் ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சனைகளும் காணாமல் போய்விடும்.

சருமப் பிரச்சனை
மேலும் இந்த ஜெல்லை கண்கள், உதடுகள், கழுத்தின் பின்புறம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் தேய்த்து வந்தால், அனைத்து இடங்களிலும் இருந்த கருமை போயே போச்சு என்று சந்தோஷப்படுவீர்கள்.
கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து, மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் தடவி வர, அந்தந்த பகுதிகளில் இருக்கும் கருமை மறைவதை நீங்களே காண முடியும்.

நகங்கள்
கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு மேலேயும், உள்ளேயும் தடவி வர, நகங்கள் வலிமையடையும்.நகங்கள் உடைகின்றதே என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.

முகத்திற்கு
கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறை முகத்தில் தடவ, தழும்புகள் நீங்கி, முகப்பருக்கள் வேருடன் அழியும். மேலும் கற்றாழை, முகப்பரு, முகத்தில் வரும் கட்டிகள், தழும்புகள், சரும சுருக்கங்கள் போன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

மாதவிடாய் பிரச்சினைகள்
இன்றைய காலகட்டத்தில் பல பெண்களின் மிகப்பெரிய பிரச்சனையாக, காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods), மற்றும் கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome) காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு எனப் பலப் விளைவுகள். இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருகிறது.
இதற்கு, கற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவுக் குறையும்.அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நிரந்தர தீர்வும் கிடைக்கும்.

மேலும், இது முதுமை தோற்றத்தைத் தடுக்கும், கொழுப்பு மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மையுடையது.




