கண்கள் தான் சரீரத்தின் விளக்குணு சொல்லுவாங்க.ஆனா, இந்தக் கண்களைச் சுற்றி வருகிற கருவளையங்கள் பலருக்கும் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். ஒருவருக்கு கருவளையங்கள் இருந்தால், அது அவரை சோம்பேறியாகவே மற்றவருக்கு வெளிக்காட்டும்.இதை எப்படி போக்குவது என்பதைப் பற்றி பார்போம்.

கருவளையங்கள் வர காரணங்கள்
கருவளையங்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.அதில் முதுமை, பரம்பரை, வறட்சியான சருமம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற டயட், நீண்ட நேர அழுகை, கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வது, கண்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயல்களை அதிகமாக செய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது கருவளையங்களை போக்க உதவும் 5 எளிய வழிகளைக் காண்போம்.

வழி – 1
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு, அந்தக் கலவையை கண்களைச் சுற்றி தடவ வேண்டும். வேண்டுமானால், இத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ சேர்த்து கொள்ளலாம். 20 நிமிடம் நன்கு ஊறியதும், நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் கண்களைச் சுற்றி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், 5 நாட்களில் கருவளையங்கள் காணாமல் போகும்.

வழி – 2
தினமும் இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயைக் கொண்டு கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினந்தோறும் செய்யும் போது, நாளுக்கு நாள் கருவளையங்கள் மெதுவாக மறைய ஆரம்பிப்பதை நீங்களே காண்பீர்கள்.

வழி – 3
ரோஸ் வாட்டரில் உள்ள குளிர்ச்சி பண்புகள், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்கி, கண்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மையுடையது.ரோஸ் வாட்டரை பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 15 நிமிடம் அப்படியே உட்கார வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் மாயமாய் மறையும்.

வழி -4
எலுமிச்சையில் ப்ளீச்சிங் பண்புகள் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றுடன் சிறிது நீர் சேர்த்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, கண்களை மூடி கண்களின் மேல் வைத்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை என ஓரிரு நாட்கள் செய்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறைவதைக் காணலாம்.

வழி – 5
ஆப்பிள் சிடர் வினிகரைக் கொண்டு கண்களைச் சுற்றி மசாஜ் செய்தால், அதில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள், கண்களைச் சுற்றி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கருவளையங்களை மறையச் செய்யும். சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு முறை செய்யுங்கள்.