சமீபத்தில் பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்ட 100 டைனோசர் முட்டைகள் பற்றிய மீம்ஸ்களும் செய்திகளும் தான் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
பொதுவா மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் உலகம் எப்போதும் வேற ஒன்றாகவே இருக்கும். நேசமணியை ட்ரெண்ட் ஆக்குவார்கள். கிருப கிருப பாடலை மில்லியன் கணக்கில் விவ்யூஸ் எகிற வைப்பார்கள். இதெல்லாம் கன்டெண்ட் எதுமே இல்லாதப்ப பாக்குற வேலை. அப்பிடிப்பட்ட ஆட்களுக்கு தலைவாழை இலை போட்டு நடுவுல அலேக்கா முட்டையை தூக்கி வச்சது தான் அந்த செய்தி…
ஒரே ஒரு செய்தி.. ஒட்டுமொத்த உலகமும் பெரம்பலூரை திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆமா இந்த டைனோசர் முட்டையை எல்லாம் எதுல வச்சு குஞ்சு பொறிக்க வைக்கிறதுனு?
நாமக்கல்காரவுகளே ஒரு நிமிசம் பதறிப்போய்ட்டாங்க.. எப்பிடிடா இனிமே இந்த முட்டை கூட கோழி முட்டைய போட்டி போட வைக்கிறதுனு.
இந்த செய்தி வந்ததுல இருந்து பெரம்பலூர்காரவுக எல்லாம் சின்ராசுகணக்கா டைனோசர வாக்கிங் கூப்ட்டு கிளம்பிட்டாங்க. இனி அவுகள கைலயே புடிக்க முடியாது. இது டைனோசர் முட்ட இல்ல… பிம்பிலாக்கி பிளாப்பி என சம்பந்தபட்டவக சொன்னாலும் யாரும் நம்பத் தயாரா இல்ல.
மீம்ஸை போட்டு திருவிழா கணக்கா என்சாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம். இனி ஒரு மாசத்துக்கு டைனோசர் தான் மீம்ஸ்.. மீல்ஸ் எல்லாமே…