பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று (21.11.2020) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தின் மூலம் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
இதில், தமிழக பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு, அங்கிருந்து காரில், மத்திய அமைச்சர் அமித்ஷா ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு புறப்படுகிறார். வழி நெடுகிலும் அவருக்கு வரவேற்பு கொடுக்க ப. ஜா. க. வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், நேற்று இரவு வரை போலீஸ் தரப்பில் இருந்து எந்த வித அனுமதியும் கொடுக்க படவில்லை. இருந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பா.ஜ.க.வினர் செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகின்றது.
இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையற்றுகிறார்.
இன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.மத்திய உள்துறை அமைச்சர் வர இருப்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையம் முதல், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரையில் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.