திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டமானது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தக் கூட்டத்தில் தேர்தல் வியூகம், பிரச்சாரப் பணி, தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை குறித்து இறுதிகட்ட ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் டி.ஆர்.பாலு. கே.என்.நேரு, பொன்முடி, ஆர்.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தற்போது திமுகவின் தேர்தல் பிரச்சாரமானது விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் தமிழ்நாடெங்கும் பரவி வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவின் பிரச்சாரங்கள் வலுவடைந்து வருகின்றது. இந்த முறை ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற தீவிரத்தில் திமுகவும் திமுகாவின் தொண்டர்களும் உழைக்கின்றனர். மேலும் இந்த விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் எனும் குழுவில் தான் இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.