சசிகலா வருகையால் அதிமுக உடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சேலம் :
சேலத்தில் பா.ஜ.கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் நெசவாளர் மற்றும் ஜவுளித்துறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி கலந்துகொண்டு பேசிய எச்.ராஜா கூட்டணி குறித்து பேசியதாவது :
புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வரும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீது தமிழக விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர். சேலம் மற்றும் சென்னை இடையே 8 வழிச்சாலை தொழில் வளர்ச்சிக்கான தமிழகத்திற்கு மிகவும் அவசியமானது என்று தெரிவித்தார்.
Read more – என் பேரு பொன்முடி.. ஊரு விழுப்புரம்.. தில் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வா.. முதல்வரை சவாலுக்கு அழைக்கும் பொன்முடி
அதனைத்தொடர்ந்து, ஊழல் பற்றி தி.மு.க. பேச தகுதி இல்லை. தமிழகத்தில் வரும் மார்ச் 15 ம் தேதிக்குள் 2 நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகும் என்று குறிப்பிட்ட அவர், சசிகலா வருகையால் அ.தி.மு.க. உடனான கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், சசிகலாவை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஒரு போதும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.