நடிகர்களின் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிடுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
உமறுப்புலவர் நினைவுநாள்.

உமறுபுலவரின் 378-வது ஆண்டு பிறந்த தின விழா அரசு சார்பில் தூத்துக்குடி, எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் வளாகத்தில் இன்று காலை நடந்தது. அவரது நினைவிடத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உமறுப்புலவரின் நினைவிடத்தில் மலர் போர்வை செலுத்தி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-
நடிகர்கள் சம்பளம்
நடிகர்கள் சம்பளத்தைக் குறைப்பது அவர்களாக முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசு இதில் நேரடியாக தலையிட்டு கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் அங்குள்ள சூழ்நிலையை பொருத்து விழாக்கால சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் அரசியல்
காரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும் என்ற தகவல் வந்தவுடன் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் தான் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இதிலும் அரசியல் செய்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.




