லக்னோ விமான நிலையத்தில் ராகுல் தர்ணா! அனுமதிக்கும் பின்பும் ஏன் பயப்பிடுகிறீர்கள் என ராகுல் கேள்வி.
டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் சமீபத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஜீஸ் மிஸ்ராவின் கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க டெல்லியில் இருந்து விமானம் டெல்லி லக்னோ சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பஹெல் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்சித் சிங் சன்னி ஆகியோருக்கு லக்கிம்பூர் செல்ல உ.பி உள்துறை அரசு அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில், லக்னோ விமான நிலையத்தில் இருந்து போலீசார் வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என உ.பி போலீசார் கெடுபிடி விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி, பூபேஸ் பாஹீல் மற்றும் சன்னி மூவரும் விமான நிலையத்தின் வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய ராகுல், காந்தி தனி காரில் செல்ல வேண்டும் என சொன்ன போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; காவல்துறை வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என சொல்கிறார்கள். இவர்கள் வேறு எதற்கோ திட்டம் தீட்டுகிறார்கள் என தெரிவித்தார். இதை தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு ராகுல் “எங்களுக்கு அனுமதி கொடுத்த பின்னரும் ஏன்? பயப்பிடுகிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
விமான நிலையத்தின் வெளியே ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இதனால், விமான நிலையத்தின் உள்ளே மற்றும் வெளியே ஏராளமான போலீசார் மற்றும் தொழிற்படை பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.