கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 27-ம் தேதி அவர் விடுதலையாக உள்ள நிலையில் உடல்நிலை மோசமானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்தநிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.
அவருக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்குதல் தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது. அவரது உணவை அவரே எடுத்துக் கொள்கிறார். அவருக்கு சக்கரை அளவு அதிகரித்துள்ளதால் அவருக்கு இன்சுலின் வழங்கப்பட்டுள்ளது. அவர் நடப்பதற்கு கைத்தாங்கலாக தடியை பயன்படுத்தி வருகிறார். அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் சிகிச்சையும் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து சிகிச்சைக்கும் அவர் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.