முதல்வரின் தாயார் காலமானதற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக முக.ஸ்டாலின் இன்று சென்னை கீரின்வேஸ் இல்லத்தில் முதல்வரைச் சந்திக்க வுள்ளதாகத் தகவல்.
தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அதிமுக ஆட்சி செய்துவருகிறது.
ஏற்கனவே உட்கட்சியில் நீடித்து வந்த குழப்பம், முதல்வர் வேட்பாளர்கள் யார் என்ற நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இவர்கள் இவருவரின் ஆதரவாளும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைக்க ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்திஅதில் முடிவு எட்டப்பட்ட நிலையில், ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்ஸை ஒருமனதாக அறிவித்தார்.
இந்நிலையில் அக்கட்சியில் உட்குழப்பம் தீர்ந்த நிலையில் எடப்பாடி பழனியின் அன்னை சேலத்தில் காலமானார்.
இதனால் அக்கட்சியின் 49 ஆம் ஆண்டு தொடக்கவிழாக் கொடியை அங்கிருந்தபடியா ஏற்றினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் , முதல்வரின் தாயார் காலமானதற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக இன்று சென்னை கீரின்வேஸ் இல்லத்தில் முதல்வரைச் சந்தித்திக்க வுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.