இந்தியாவில் சுயமாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட் கேரியர் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே ஹைப்பர்சோனிக் ராக்கெட்டுகளை வெற்றிக்காரமாக சோதித்து உள்ளது.
இந்நிலையில் இன்று ஒடிசாவில் எச்டிடிவி (HTDV ) எனப்படும் Hypersonic Test Demonstrator Vehicle சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்தது. ஒடிசாவில் இருக்கும் அப்துல்கலாம் சோதனை மையத்தில் இந்தியா இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. ரஷ்யா, சீனா, அமெரிக்காவை தொடர்ந்து இந்த சோதனையை இந்திய வெற்றிகரமாக செய்துள்ளது குறிப்பிடதக்கது.
ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் தொழில்நுட்பம்தான் ஹைப்பர்சோனிக் ஆகும். அதாவது மேக் 6 வேகத்தில் செல்வதை ஹைப்பர்சோனிக் என்று கூறுவார்கள்.
எச்டிடிவி (HTDV ) என்பதை ஹைப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் ( Hypersonic Test Demonstrator Vehicle) என்று அழைப்பார்கள். எச்டிடிவி என்பது ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் scramjet எஞ்சின் கொண்ட ராக்கெட் ஆகும். இதைத்தான் இந்தியா தற்போது வெற்றிகரமாக ஒடிசாவில் சோதனை செய்துள்ளது. இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் ஏவுகணைகளை செலுத்த முடியும். அதேபோல் ஹாப்பர்சோனிக் வேகத்தில் விண்ணில் செயற்கைகோள்களை செலுத்த முடியும். குறைவான விலையில் விண்ணில் செயற்கைக்கோளை அனுப்ப முடியும்.
அதோடு இந்த எச்டிடிவி வகை ஹாப்பர்சோனிக் ராக்கெட் கேரியர்களை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி காரணமாக இந்தியா இனி scramjet எஞ்சின்களை கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்க முடியும். தற்போதைய சோதனை டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி தலைமையிலான குழு மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையை அக்னி ஏவுகணை பூஸ்டர் உதவியுடன் செய்து இருக்கிறார்கள். இன்று காலை 11.03 மணிக்கு சோதனை நடந்துள்ளது.
முதலில் எச்டிடிவியை (HTDV) தாங்கிக் கொண்டு 30 கிமீ தூரம் வரை அக்னி ஏவுகணை பூஸ்டர் சென்றுள்ளது. அதன்பின் அக்னி பிரிந்த பின், எச்டிடிவி (HTDV) கேரியரில் இருக்கும் scramjet செயல்பட்டு, 20 நொடிகள் பறந்துள்ளது. 20 நொடிகள் ஹைப்பர்சோனிக் வேகத்தில் இந்த எச்டிடிவி (HTDV) விண்ணில் பறந்துள்ளது.
அதிலும் 2500 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை தாக்குப்பிடித்து சேதம் அடையாமல் இந்த எச்டிடிவி (HTDV) விண்ணில் பறந்துள்ளது. அக்னி ஏவுகணையில் இருந்து மிக சரியாக பிரிந்து தானாக எச்டிடிவி இயக்கப்பட்டு, ஹைப்பர்சோனிக் வேகத்தை இந்த ஹைப்பர்சோனிக் டெஸ்ட் டெமான்ஸ்ட்ரேட்டர் வெஹிகிள் எட்டி உள்ளது. கடந்த வருடமே இதன் முதல்கட்ட சோதனை வெற்றிபெற்ற இந்தியா தற்போது முழு சோதனையில் வெற்றிபெற்றுள்ளது.
தற்போது, எல்லையில் நம்மிடம் வாலாட்டி வரும் சீனா போன்ற நாடுகளுக்கு, இது போன்ற ஏவுகணைகளைக் கொண்டு அந்த நாட்டுக்கு அதிகபட்ச இழப்பை நம்மால் ஏற்படுத்த முடியும்.