
சந்திரன் என்பது ஒரு வான அதிசயம். அதன் மேடு பள்ளமான நிலப்பரப்பும், கறைகள் மற்றும் வடுக்கள் தான் அதன் அழகுக்கு காரணம் என்றே சொல்லலாம்.உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக பல்வேறு வானியலாளர்கள் தங்கள் தொலைநோக்கிகளால் நிலவை தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டே தான் இருக்கின்றனர். எவ்வளவு ஆண்டுகளை கடந்தாலும் அது நமக்கு தொடர்ந்து அழகாக காட்சி அளிக்கத்தான் செய்கிறது.

தற்போது இந்தியர் ஒருவர் தன் சாதாரண DSLR கேமரா மூலம் நிலவை பிடித்துள்ள படம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிலவை இதுவரை பல கோணங்களில் படம் பிடித்துவிட்டோம். பூமியில் இருந்து, விண்வெளியில் இருந்து மட்டுமல்லாமல் நிலவில் இருந்தும் நிலவை படம் பிடித்துவிட்டோம். ஆனால் தற்போது இந்தியரான கிருஷ்ணா பிடித்துள்ள படம் “வேற லெவலில்” உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த படம் நிலவை அதன் பள்ளங்களுடன் காட்டுகிறது மற்றும் வலது புறம் இருண்ட விண்மீன் பின்னணியில் அரை வட்டம் ஒளிவட்டம் போல ஒளிரும்.
சாதாரண கேமராவில் ஏப்படி சாத்தியமானது?

இதை எப்படி படம் பிடித்தார் என்பதை பற்றி கூறிய கிருஷ்ணா, நிலவு ஒரு சில நாட்களில் தனித்துவமாக ஒளிரும். சூரியன் அஸ்தமனம் ஆகும் பொது அதன் கதிர்கள் கடலில் பட்டு குறிப்பிட்ட ஒரு கோணத்தில் நிலவில் பட்டு பிரதிபலிக்கும். இது வழக்கமாக வளர்பிறை நிலவின் 3 முதல் 5 வது நாட்களில் ஏற்படும். கிருஷ்ணா இதை வளர்பிறை நிலவின் 3 வது நாளில் படம் பிடித்ததாக தெரிவித்துள்ளார். மீண்டும் 3 நாட்கள் கழித்து அதிக வெளிச்சத்தில் ஒரு படம் எடுத்தார். பின்னர் அனைத்து படங்களையும் மென்பொருளின் உதவியுடன் ஒன்றிணைத்துள்ளார்.

Canon 200D கேமராவில் 55-250மிமீ லென்ஸ் உதவியுடன் இவர் இந்தப்படத்தை எடுத்துள்ளார். பல கோடி செலவாகும் தொலைநோக்கிகள் எடுக்கும் படம் கூட இப்படி இருப்பதில்லை. அனால் இந்த அற்புதமான படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட கேமரா ரூ .60,000 தான். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான 200 படங்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிதித்துள்ளார்.
High Dynamic Range (HDR) எனப்படும் முறையில் இது பிடிக்கப்பட்டுள்ளது. Astro Photography எனப்படும் பொழுதுபோக்குக்காக யார் வேண்டுமானால் இத்தகைய படங்களை பிடிக்க முடியும் என்பதற்கான சான்றாக இந்த புகைப்படம் உள்ளது.




