டெஸ்ட் பிளேயர் என்று தொடர்ந்து முத்திரை பதிக்கப்பட்ட விருத்திமான் சஹா டெல்லி அணிக்கு எதிராக 45 பந்துகளில் 87 ரன்கள் அடித்து நானும் டி-20 பிளேயர் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு அவர் இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி தொடர்ந்து இருந்து வருகிறது.கே.எல்.ராகுல்,சஞ்சு சாம்சன்,ரிஷப் பண்ட் இவர்கள் வரிசையில் விருத்திமான் சஹாவும் காத்திருக்கிறார்.தோனி கடந்த 2014 டெஸ்ட் ஓய்விற்கு பிறகு சஹா டெஸ்ட் அணியில் அவ்வப்போது இடம் பிடித்து வருகிறார்.சஹா ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும்,அவர் இன்று வரை புஜாரா,ரஹானே போன்று டெஸ்ட் பிளேயர் வரிசையில் மட்டுமே கணக்கிடப்படுகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வடிவ இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது,அந்த பட்டியல் வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்து கொண்டு வருகிறது.அந்த வரிசையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் இடம் பிடித்த விருத்திமான் சஹா,ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.இதனை தொடர்ந்து நேற்று ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய சஹா டெல்லி அணிக்கு எதிராக 45 பந்துகளில் 87 ரன்கள் அடித்து நானும் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் தகுதி ஆனவர் என்று நிரூபித்து வருகிறார்.

இதுவரை சஹா ஐ.பி.எல் தொடரில் 1 சதம், 7 அரை சதங்கள் உள்பட 97 போட்டிகளில் 1882 ரன்கள் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.




