டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்கியா நேற்று நடந்த பேட்டியில் 156.2 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி ஐ.பி.எல் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் 30 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது . முதலில் பேட் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. டெல்லி அணியின் பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி திணறி 20 ஓவர் முடிவில் 148 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்த போட்டியில் டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா அதிவேகமாக பந்தானது மணிக்கு 156.2 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 2012 ஆண்டுக்குப்பின் அதிவேகத்தில் வீசப்பட்ட பந்து இதுவே ஆகும் .நோர்கியா வீசிய 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இது குறித்து அன்ரிச் நோர்கியா கூறுகையில் ‘‘போட்டி முடிந்த பின்னர்தான் நான் கேட்டு தெரிந்து கொண்டேன் நான் எவ்வளவு வேகமாக வீசினேன் என்று. ஆனால் வேகமாக பந்தை வீசி நான் கடின பயிற்சி மேற்கொண்டேன்.
பந்தை வேகமாக வீசியதால் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உண்மையில் நான் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்ய விரும்புகிறேன் என்றார்.