நேற்று ஷார்ஜாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குள் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 33 சிக்சர்களை பறக்க விட்டனர்.
ஷார்ஜா:
சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் மொத்தம் 33 சிக்சர்கள் விளாசப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் 17 சிக்சர்களும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 16 சிக்சர்கள் அடித்தன.அதில் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மட்டும் 9 சிக்சர்களும், சுமித், ஆர்ச்சர் தலா 4 சிக்சர்களும், சி.எஸ்.கே. அணியில் டு பிளிஸ்சிஸ் 7 சிக்சர்களும், வாட்சன் 4 சிக்சர்களும், டோனி 3 சிக்சரும், சாம் கர்ரன் 2 சிக்சர்களும் தெறிக்க விட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் மொத்தமாகவே இரு அணிகளும் சேர்த்து 18 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. இரு அணிகளும் தலா 9 பவுண்டரிகள் அடித்து இருந்தனர். கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த டோனி அடித்த ஒரு சிக்ஸ் மைதானத்தை தாண்டி சாலையில் விழுந்தது.