இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன் தினம் ஆரம்பித்தது. முதல் டெஸ்ட் போட்டி, ஓல்டு டிரஃபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது
இன்று முதலாவது டெஸ்டின் 3 வது நாளில் இங்கிலாந்து பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது பாகிஸ்தான் தொடர்ந்து அதிக அழுத்தம் கொடுத்து வந்து கொண்டிருக்கிறது, உள்நாட்டு அணியான இங்கிலாந்து தொடர்ந்து இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வருகிறது. ஜோஸ் பட்லர் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் காலையில் ஆட்டமிழந்தனர்,
92/4 இலிருந்து இங்கிலாந்து 3 வது நாளில் மீண்டும் பேட்டிங்கைத் தொடங்கியது,தற்போது இங்கிலாந்து 219 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
முந்தைய நாட்கள் நடந்தஆட்டங்களில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷான் மசூத், அதிகபட்சமாக 156 ரன்கள் அடித்தார் இது அவரின் மூன்றாவது சதமாகும். அவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம், 69 ரன்கள் குவித்தார்.
இங்கிலாந்து சார்பில் ஸ்டுவர்ட் பிராட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர், அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.