இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து அணி.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்தாலும் இந்தப் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதலில் இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இன்று காலை தொடங்கியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.