இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி விவசாயத்தின் மீது உள்ள ஈடுபாட்டால் புதிதாக கோழி பண்ணை ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ராஞ்சி :
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஏற்கனவே விளம்பரங்கள் மற்றும் இதர பிற தொழில்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தது நாம் அறிந்ததே.இந்தநிலையில் எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இயற்கை உர விவசாயத்தில் மற்றும் தர்பூசணியை இயற்கை உரத்தில் அதிக அளவில் மகசூல் பெறுவது எப்படி,எப்படி கற்றுக்கொண்டேன் என்பது போன்ற பதிவுகளை அவரது மனைவியுடன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து இப்பொழுது எம்.எஸ்.தோனி கோழிப்பண்ணை வணிகத்தில் தனது கால் தடத்தை பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மத்திய பிரதேசம், ஜபுவா மாவட்டத்திலுள்ள தண்ட்லா என்னும் இடத்தில் வினோத் மேத்தா என்பவருக்கு சொந்தமான கதக்நாத் கோழி பண்ணை உள்ளது. அந்த பண்ணையில் இருந்து 2000 கோழிகள் வாங்குவற்கு தோனியின் பண்ணையை நிர்வகிக்கும் மேனேஜர் கிரிஸ் விகாஸ் கேந்த்ரா மற்றும் எம்.பி,கதக்நாத் செல் போன் செயலி மூலம் தொடர்பு கொண்டு 2000 கோழிக்கான ஆர்டரை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோழி பண்ணை உரிமையாளர் வினோத் மேத்தா டிசம்பர் 15 ம் தேதி எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் டெலிவரி செய்ய இருக்கிறேன் என்றும் முன் பணம் ஏற்கனவே என்னுடைய அக்கவுண்ட்டில் செலுத்தப்பட்டுவிட்டது. எம்.எஸ். தோனியின் பண்ணைக்கு கதக்நாத் கோழியை நான் வழங்க இருப்பதில் பெருமையாக இருக்கிறது’’ என்று கூறினார்.