லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 16ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது.

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. மொத்தம் 4 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கான கேப்டன்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு சேவாக்கும், இந்திய கேப்பிடல்ஸ் அணிக்கு கவுதம் கம்பீரும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.




