செஸ் ஒலிம்பியாட்2020 இணையதள உலகபோட்டியில் இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து சாதித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு தற்போது தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இநதிய வீரர் கோனேரு ஹம்பியின் சமயோசிதமான ஆட்டத்தால் இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்ற 2014-ம் ஆண்டு வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த வருடம் நாக் அவுட் வடிவத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுவதால், இதில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும்இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள் இந்த வருடம்தான் முதன்முறையாக ஒலிம்பியாட் போட்டிகள் ஆன்லைன் வடிவங்களிலும், இறுதி கட்டமாக நாக் அவுட் முறையிலும் விளையாட்டு அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா போலந்து அணியை சந்தித்தது. முதல் சுற்றிலேயே விதித்து குஜராத்தி மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தோல்வி அடைந்தார்கள்.ஹரிகா மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரும் தங்களது போட்டிகளை சமன் செய்து இருந்தனர். நிஹால் சரன் மட்டும் வெற்றியை பெற்றிருந்தார். இதனால் இந்திய அணி முதல் சுற்றை 2-4 என்ற கணக்கில் இழந்திருந்தது.
இதற்குப் பின் நடந்த நடந்த இரண்டாம் சுற்று ஆட்டங்களில். விஸ்வநாதன் ஆனந்த், விதித்குஜராத்தி, கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர் அதில் வெற்றியும் அடைந்தனர். பிரக்ஞானந்தா மட்டும் தோல்வி பெற்றார் எனினும் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி 4.5-1.5 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை தொடங்கப்பட்டது. இதில் யார் விளையாட வேண்டும் என்பதை போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்து அறிவித்தனர். அவர்கள் போலந்து தரப்பில் மோனிகா சாகும் இந்தியா தரப்பில் கோனேரு ஹம்பியும் விளையாட அழைத்தனர்.
மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் பெற்ற இந்த டைபிரேக்கர் போட்டியில் கோனேரு ஹம்பி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மோனிகாவை என்றார். இதன்மூலம் உலகிலேயே முதன்முறையாக இவ்வகையான செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அனைவரையும் அசத்தியுள்ளது.
இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் உலகிலேயே பலமான அணியான ரஷ்ய அணியை எதிர்கொள்கிறார்கள் இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு தங்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.