டி காக்கின் அதிரடி அரைசதத்தால் மும்பை அணி 17 ஓவர்களில் 149 ரன்கள் துரத்தி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து வருகிறது.

அபு தாபி :
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் மோர்கன் மற்றும் கம்மின்ஸ் இறுதியில் அதிரடியை வெளிபடுத்த 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 148 ரன்கள் அடித்தது.
149 என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் ஆரம்பம் முதல் அடித்து நொறுக்கினர்.சிறப்பாக விளையாடிய டி காக் 25 பந்துகளில் 50 ரன்களை கடக்க,10 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை பெற்று இருந்தது.

11 ஓவர் வீசிய மாவி பந்தில் ரோஹித் சர்மா(35 ரன்கள்,36 பந்துகள்) ஒரு பௌண்டரி அடித்து அசத்த,அடுத்த பந்தே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அதன் பிறகு களம் இறங்கிய சூர்யா குமார் யாதவ் தட்டி கொடுக்க,மறுமுனையில் டி காக் ரன் வேட்டையை வெளிப்படுத்தினார்.13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மும்பை பெற்றிருக்க, வருண் சக்கரவர்த்தி அடுத்த ஓவர் வீசி சூர்யா குமார் யாதவை 10 ரன்களில் வெளியேற்றினார்.சிவம் மாவி வீசிய 15 வது ஓவரில் டி காக் அடுத்தடுத்து பௌண்டரி,சிக்ஸர்களை பறக்கவிட,புதிதாக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு கம்மின்ஸ் பந்தில் 2 பௌண்டரி,1 சிக்ஸரை தெறிக்கவிட்டார்.21 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே மும்பை அணிக்கு தேவையாக இருக்க,ஹர்திக் ஒரு பௌண்டரி அடித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.19 பந்துகளை மிச்சம் வைத்து மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.
மும்பை அணியில் டி காக் 78 ரன்களுடனும்,ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
மும்பை அணியின் ரன் வேட்டைக்கு முக்கிய காரணமாய் இருந்த டி காக்கிருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.




