கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி.
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து இருந்தது.
85 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் பட்டிகல் வர,இருவரும் ஓரளவு அடித்து ஆடி 6 ஓவர்களில் 46 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.பெர்குசன் வீசிய 7 வது ஓவரில் அடித்து ஆட முற்பட்ட பின்ச்(16 ரன்கள்,21 பந்துகள்) தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் பட்டிகல் ரன் அவுட் ஆகி நடையைக்கட்ட,8.4 வது பந்தில் குர்கீரித் ஒரு பௌண்டரியை ஓட விட்டு பெங்களூர் அணி 50 ரன்களை கடக்க உதவி செய்தார்.வருண் சக்கரவர்த்தி வீசிய 9 வது ஓவரில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஒரு பௌண்டரி அடிக்க,அதே ஓவரில் குர்கீரித் சிங்கும் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.இருவரும் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13.2 ஓவர்களில் 85 ரன்கள் அடித்து வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூர் அணி சார்பில் குர்கீரித் சிங் 21 ரன்களுடனும்,கேப்டன் கோலி 18 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
கொல்கத்தா அணியில் சார்பில் பெர்குசன் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
பெங்களூர் அணியில் 3 விக்கெட் கைப்பற்றிய சிராஜ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.