அடுத்த மாதம் அக்டோபர் 1ம் தேதி முதல் மதுரை டூ துபாய் நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மதுரையில் இருந்து துபாய்க்கு ஒப்பந்தப்படி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. வாரத்திற்கு 3 நாட்களுக்கு மதுரை – துபாய் மற்றும் துபாய் – மதுரை வழித்தடத்தில் விமான சேவையை தொடங்குகிறது. அதன்படி, துபாயில் இருந்து மதுரைக்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை துபாய் நேரப்படி 3.35 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை இந்திய நேரப்படி 9.20 மணிக்கு வந்து சேரும் எனவும் அதுபோல் மதுரையில் இருந்து துபாய்க்கு ஞாயிறு, புதன், வெள்ளி கிழமைகளில் காலை இந்திய நேரப்படி 11.50 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு மதியம் துபாய் நேரப்படி 2.35 மணிக்கு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.