ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்காக சென்னை அணி வழங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணி சார்பாக தொடக்க வீரர்களாக சாம் கர்ர்ன் மற்றும் டு பிளிசி களம் இறங்கினர்.பெரிதும் எதிர்பார்த்த டு பிளிசி ஆர்ச்சர் பந்தில் 10 ரன்களில் வெளியேற,அடுத்து வந்த வாட்சனும் 8 ரன்களில் நடையைக்கட்டினார்.ஓரளவு அடித்து ஆடிய சாம் கர்ர்ன்(22 ரன்கள்,25 பந்துகள்) ஷ்ரேயஸ் கோபால் வீசிய 9 வது ஓவரில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ராயுடுவும் 13 ரன்களில் அவுட் ஆக,அதன் பின்னர் தோனியுடன் இணைந்த ஜடேஜா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.நிலைத்து நின்று பொறுமையாய் ஆடி இருவரும் 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த நிலையில் அடித்து ஆட முயற்சித்து தோனி(28 ரன்கள்,28பந்துகள்) ரன் அவுட் ஆனார்.மறுமுனையில் ஆர்ச்சர் வீசிய 19 வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து 2 பௌண்டரிகளை விரட்ட,20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்து ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்காக வழங்கியது.
சென்னை அணி சார்பில் 35 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர்,ஷ்ரேயஸ் கோபால்,ராகுல் திவாதியா மற்றும் கார்த்திக் தியாகி தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
இனி வரும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி நல்ல ரன் ரேட் முறையில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு வாய்ப்பு இருக்கும் நிலையில்,இப்படி வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை அணி சொதப்பியதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.