ஐ.பி.எல் போட்டிகளில் தனது அதிவேக அரை சதத்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான நிக்கோலஸ் பூரன் விளாசினார்.
ஐ.பி.எல் போட்டிகள் யுஏஇ நாட்டில் நடைபெற்று வருகின்றன.இதில் நேற்று பஞ்சாப்-ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்தது. இதையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சிம்ரன் சிங் 11 ரன்னில் அவுட்டானார். அப்போது பஞ்சாப் அணி 4.2 ஓவரில் 31 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். ஆரம்பம் முதலே அவர் அதிரடியாக விளையாடினார். அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக சிக்ஸர்களை விளாசினார். அவர் சந்தித்த 17-வது பந்தில் சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் இது அதிவேக அரைசதம் ஆகும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 2-வது அதிவேக அரைசதம் ஆகும்.