இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது.
கிரிக்கெட் உலகில் விராட் கோலிக்கும், இந்தி சினிமாவில் அனுஷ்கா சர்மாவுக்கும் என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருவரும் எப்போதும் சோஷில் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம். சில மாதங்களுக்கு முன் தான் தாய்மை அடைந்ததை சமூக வலைதளம் மூலம் தெரியப்படுத்தி இருந்தார் அனுஷ்கா. அதன்பிறகு கர்ப்பிணியாக இருக்கும்போது தான் செய்யும் அன்றாட வேலைகளை எல்லாம் மறக்காமல் தனது ரசிகர்களுக்கு அப்லோடு செய்து வந்தார். இந்த நட்சத்திர தம்பதிக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
தனது முதல் குழந்தை வரவுக்காக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட கோலி பங்கு பெறவில்லை. இந்த நிலையில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதுகுறித்து விராட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று பிற்பகல் நாங்கள் ஒரு பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். காதலுடன் விராட் என்று அவர் பதிவிட்டுள்ளார்.