ஐபிஎல் தொடரிலிருந்து, டைட்டில் ஸ்பான்சர் ஆக இருந்த சீனாவின் ‘வீவோ’ நிறுவனம் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பாக, இந்தியாவில் எழுந்த சீன எதிர்ப்புநிலைப்பாடு நிலவுவதால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், பல ஆயிரம் கோடிகள் புழங்கும் ஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சராக தொடரும் வீவோ நிறுவனத்தை கழற்றி விடுங்கள் என பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
இதனை ஏற்று பிசிசிஐ தற்போது நிலவும் பதட்டம் காரணமாக இந்த 2020ம் ஆண்டு மட்டும், டைட்டில் ஸ்பான்சர் என்ற அந்தஸ்தில் இருந்து சீன நிறுவனம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மற்றபடி, ஏற்கனவே நிலவும் ஒப்பந்த அடிப்படையில் அடுத்த வருடம் தொடங்கிது 2023 வரை, பழைய ஒப்பந்தப்படி ‘வீவோ’ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக தொடர்ந்து செயல்படும் என்று தெரிகிறது.மேலும், இந்தாண்டு விலகல் முடிவை சீன நிறுவனம் அவர்களாகவே தானாக முன்வந்து கொள்வது மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிசிசிஐ புதிய டைட்டில் ஸ்பான்சரை உடனடியாக தேடும் பணிகள் தீவிரமாக பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவித்து உள்ளது