இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் ஏலம் சென்னையில் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. “இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்கள் மார்ச் மாதம் நிறைவடையும். பின்பு வீரர்கள் அனைவருக்கும் போதிய ஓய்வு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டு ஜூன் 5 அல்லது 6 தேதியில் நிறைவடையும்” என்றார்.