7 வயது சிறுவன் ஓம்கார ஆசனத்தை 6 நிமிடங்களுக்கு மேல் செய்து உலகச்சாதனை படைத்துள்ளார்.
சென்னை, ஆவடி பகுதியை சேர்ந்த பாபுரவி, சரண்யா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். அதில் மூத்த மகன் தர்ஷித் (7) பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவயது முதலே யோகா ஆசனம் செய்து வரும் தர்ஷித் அதில், சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் தனது தந்தையின் உதவியோடு பயிற்சி எடுத்து வந்தார். சாதனையின் ஒருபகுதியாக மிகவும் கடினமான ஓம்கார ஆசனத்தை தலையில் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைத்தவாறு 6.14 நிமிடங்கள் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை ’நோபல் வேர்ல் ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்குமுன்பு ஓம்கார ஆசனத்தில் 2.45 நிமிடங்கள் செய்ததே சாதனையாக இருந்தது. தர்ஷித் அந்த சாதனையை முறியடித்ததுடன் மூன்று மடங்கு நேரம் அதிகமாக செய்தும் அசத்தியுள்ளார். அவரை, யோகா மாஸ்டர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டினர்.