AZD1222ஆஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்துள்ள ChAd Ox1 nCov19 எனும் தடுப்பூசி இல் ஏற்பட்ட தொய்வு நிலை குறித்து சிவகங்கை சேர்ந்த பொதுமருத்துவர் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அளித்துள்ள விவரங்கள் பின்வருமாறு..
முதல் இரண்டு படிநிலைகளை நல்ல முறையில் கடந்தது குறித்தும் மூன்றாவது படிநிலைக்குள் நுழைந்தது .தடுப்பூசி கடந்து வரவேண்டிய முக்கிய படிநிலைகளான
Phase 0 – pre clinical ஆய்வக பரிசோதனை
animal study விலங்குகளுக்கு கொடுத்து சோதிக்கும் பரிசோதனை
Phase 1 – பாதுகாப்பை உறுதி செய்ய ஆரோக்கியமான மனிதர்கள் சிலருக்கு கொடுத்து செய்யும் பரிசோதனை
Phase 2 – சில நூறு பேருக்கு குறைவான அளவு முதல் தேவையான அளவு வரை தடுப்பூசியை கொடுத்து பாதுகாப்பு மற்றும் திறன் பரிசோதனை நடக்கும்
Phase 3 – பல்லாயிரம் பேருக்கு கொடுத்து
தடுப்பூசியின் திறன் ஆய்வு செய்யப்படும்
Phase 4 – Post Drug Marketing surveillance
மருந்தை வெளியிட்டவுடன் மக்களிடம் நடத்தப்படும் பரிசோதனை.இதில் phase 3 பரிசோதனையில் இருந்த ஆஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசிபிரிட்டன் , ப்ரேசில், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் தன்னார்வலர்களை தேர்வு செய்து மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து வந்தது.
இதில், பிரிட்டனில் தடுப்பூசி வழங்கப்பட்ட சிலருக்கு விரும்பத்தகாத ஒவ்வாமை நிகழ்வுகள் தோன்றியிருப்பதை ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.இதன் விளைவாக இந்த தடுப்பூசி கொண்டு செய்யப்படும் மூன்றாம் கட்ட ஆராய்ச்சியை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த தடுப்பூசி உருவாக்கத்தில் பங்கு வகிக்காத எவ்வித தலையீடும் இல்லாத சுதந்திரம் உள்ள ஒரு குழுவை இந்த நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை பிறப்பிக்கக்கோரியுள்ளது.அந்த குழுவின் பரிந்துரைப்படி ஆராய்ச்சியை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.
நவீன மருத்துவத்தின் பார்வையில்மூன்று கட்ட பரிசோதனைகளையும் முழுமையாக சிறப்பாக முடித்து தேறிவரும் மருந்தை மட்டுமே ஏற்க முடியும்.
AZD1222 தடுப்பூசி பரிசோதனையில் ஏற்பட்டுள்ள இந்த தொய்வும் எதிர்பார்க்கப்பட்டதே ஆகும்.
நம்மை அடையும்ஒவ்வொரு மருந்தும் இது போன்ற பல அக்னிப்பரீட்சைகளை கடந்தே வருகின்றன. எனவே மருந்து உற்பத்தியில் இது சாதாரண நிகழ்வாகும்.
எனினும், இந்தப்பெருந்தொற்று காலத்தில் அதை ஒட்டி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் பெரிதாக பேசப்படுவதால் இந்த நிகழ்வும் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் வெளிப்படையாக ஆராய்ச்சியில் உள்ள இடற்பாடை ஒப்புக்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திருப்பது பாராட்டத்தக்கது. அறிவியலை எப்போதும் நாம் வளைக்க முடியாது.அதன் போக்கில் சென்று நமக்கான வெற்றியை தேடிக்கொள்ள வேண்டும்.