Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

வருடா வருடம் ஒரு புயல் கடக்கிறது..இங்கு என்னதான் நடக்கிறது..

November 29, 2020

அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து புயல்களின் ஆதிக்கம் தலை தூக்குகிறது.மக்கள் படும் துயர் மாறா துயராகவே மாறி வருகிறது.வீடுகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தடம்பதித்து பாம்பை போல் படம் எடுத்து ஆடுகிறது.

பல முன்னணி கட்சிகள் முதல் நிவர் புயலின் ஏற்பட்ட சேதாரத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைக்கிறார்களே தவிர,அதற்கான விடயம் இன்றளவு வரை கேள்வி குறியாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் சாலை விரிவாக்கத்துக்கு புதிய திட்டம்; 182 கோரிக்கைகளுக்கு விரிவான திட்ட அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு மேலும் நிவாரணம்; கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!

ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!

கடந்த 2015 ல் ஏற்பட்ட டிசம்பர் வெள்ளம் இன்று வரை நமக்கு மறையாத வடுவாகவே இருந்து வருகிறது.கிட்டத்தட்ட 18 லட்ச மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி 6,605 முகாம்களுக்குள் அடைக்கலம் அடைய செய்தது.அடுத்த ஆண்டே வந்த வர்தா புயல் அனைத்தையும் வாரி சுருட்டி கொண்டு சென்று விட்டது.

Revisiting the December 2015 floods in Chennai: images from The Hindu - The  Hindu

2017 ல் வந்த ஓகி புயல் முக்கடல் இணையும் கன்னியாகுமரியை கதறவிட்டது.2018 ல் கஜா புயல் மனித உயிர்கள் முதல் கால்நடை வரை பலியாக்கி..பல கோடி மதிப்புள்ள விவசாய நிலங்களையும் நிர்மூலமாக்கியது.

இந்த ஆண்டு ஒரு புறம் கொரோனாவில் ஆரம்பித்து இப்பொழுது நிவர் புயலில் வந்து நிற்கிறது.இவை அனைத்தும் ஒரு வித இயற்கை பேரிடர்களாக இருந்தாலும் இவை அனைத்தும் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு வகையில் மக்களாகிய நாமும் ஒரு காரணமாய் தான் இருந்து வருகிறோம்.இது என்ன புது கதை என்று நீங்கள் சிந்தித்தால் அதற்கான விளக்கமும் எங்களிடம் உள்ளது.

Cyclone Nivar may make landfall today: Could it be a repeat of 2015 floods  for Chennai?

விஞ்ஞானிகளின் கணிப்பின்படி 27 டிகிரி செல்சியஸ்க்கு மேல் கடல் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கும் போது இயற்கையாகவே ஒரு புயல் உருவெடுக்க தொடங்கி விடுகிறது.கடல் மேற்பரப்பில் ஒரே ஒரு செல்சியஸ் வெப்பம் அதிகரித்தாலும் கூட அதனால் ஏற்படும் விளைவுகள் மிகப் பெரியதாகவே இருக்கும் என்கிறார்கள் .நாம் வீடு மற்றும் அலுவலங்களில் பயன்படும் குளிர்சாதனங்களின் உயர் வெப்ப சலனத்தின் தாக்கம்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் வெளிப்படும் புகையின் அளவு.தொழிற்சாலைகளில் இருந்து வெளியே கொட்டப்படும் கழிவுகள் கடல் மற்றும் நிலப்பரப்பை நாசம் செய்கின்றனர்.இவையனைத்தும் காலத்தின் தேவைகள் என்றாலும் தொடர் மாற்றம் நமக்கு தொடர் தாக்குதலை நடத்தி விடுகிறது.

கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் மட்டும் தென்னிந்திய கடற்கரைகள் சுமார் 300க்கு மேற்பட்ட புயல்களை கடந்து உள்ளது. மனித வளர்ச்சியின் வெளிப்பட்டால் நம்மை சுற்றியுள்ள சுற்று சூழல் எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது என்று நாம் உணர்ந்தாக வேண்டும்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 14 புயல் அதாவது வங்காள விரிகுடா கடல் 7 புயல்களையும்,அரபி கடல் 7 புயல்களையும் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

In Chennai, rains stop, but problems continue to persist - Rediff.com India  News

இதில் மிக பெரிய வருத்தம் எனனவென்றால் இங்கு எங்கு புயல் தாக்கினாலும் சென்னை மற்றும் கடலூர் பகுதி மக்கள் முதலில் பாதிக்கப்பட்டு வீடுகளில் தண்ணீரை பன்னீர் தெளித்து வரவேற்கும் கட்டாய சூழலில் சிக்கி கொள்கிறார்கள்.தண்ணீரை வீடுகளிலிருந்தும்,சாலைகளில் இருந்தும் வெளியேற்ற தெரிந்த அரசிற்கு அதை வீடுகளுக்குள் வரவிடாமல் தடுக்கும் முயற்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை போல…

குடும்ப தேவைக்காக கூட்டம் கூட்டமாய் குவியும் மக்கள் நோட்டுக்கு ஒரு பக்கம் ஓடுகிறார்கள்..ஆட்சியை பிடிக்க நீ நான் என்று பல கட்சிகள் மக்களை மறுபக்கம் ஓட்டுக்காக தேடுகிறார்கள்..யாரை குற்றம் சொல்லி என்ன மாற்றம் பெரிதாக வந்துவிட போகிறது.. இன்னும் இரண்டு நாட்களில் வரப்போகும் புரவி புயல் வருவதற்குள் கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது ஒரு படகை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியது தான்..நமது முன்னெச்சரிக்கைக்காக..

கட்டுரையாளர்: முகேஷ் கண்ணன்

THE CHENNAI FLOODS OF 2015 – HISTORY REPEATS ITSELF by Joseph Thomas «  Guftagu @ amolak.in

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வேளாண் சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் டெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்போம்

Next Post

இளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்

Next Post

இளம்பெண் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஓட்டல் ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய போலீஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version