மதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலர் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், ஏராளமானோர் கொரோனாவை எதிர்கொண்டு குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர், கொரோனா மீதான அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக விபரீதமான முடிவை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரையில் மொத்தம் 7,14,235 பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர், மருத்துவமனையின் மூன்றாம் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.