பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவுக்கென முகநூல் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தை துவக்கி வைத்த காவல் ஆணையர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்புப் பிரிவுக்கென, பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும், முகநூல் (Facebook) மற்றும் ட்விட்டர் (Twitter) ஆகிய சமூக வலைதள தொடர்பு பக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் 01.09.2020 -ம் தேதியன்று காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்புப்பிரிவின் துணை ஆணையாளர் திருமதி.ஜெயலஷ்மி அவர்கள் உடனிருந்தார்.