வருகின்ற 19 ம் தேதி முதல் திறந்தவெளியில் மத,அரசியல் கூட்டங்கள் நடத்திட அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,வருகின்ற 19 ம் தேதி முதல் திறந்தவெளியில் மத,அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே,தமிழக அரசு சார்பில் உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில்,தற்போது கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி திறந்தவெளியில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
Read more – அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
இக்கூட்டங்களுக்கு திறந்தவெளியின் அளவிற்கேற்ப (Total Capacity) சமூக இடைவெளியை பின்பற்றி, அதிகபட்சம் 50 % பங்கேற்பாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும்,இந்த கூட்டங்களை நடத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையரிடம் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.