தமிழக மக்களுக்கு வளமான ஆண்டாக ஆங்கில புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக மக்களுக்கு வளமான ஆண்டாக ஆங்கில புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட வாழ்த்து செய்தியில் கூறியதாவது :
Read more – கேரளாவில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கடும் கட்டுப்பாடு : பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை
புத்தாண்டு மலர்கின்ற இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மலரும் இப்புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறினார்.
மேலும், வளம், வலிமை மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச்செய்திட ஒற்றுமையுடன் உழைத்திடுவோம் என்றும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.