தமிழகத்தில் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/corona-1-1024x683.jpg?resize=1024%2C683&ssl=1)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமாக 6, 472 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் சென்னையில் மட்டும் 1,336 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,900 ஆக உயர்ந்துள்ளது.இன்று தமிழகத்தில் ஒரேநாளில் 88 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 5,210 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் இதுவரை 1,36,793 பேர் குணமடைந்துள்ளனர்.