Tuesday, July 15, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மகளுக்குச் சம்பந்தம் முடித்த தினகரன்

July 26, 2020
சசிகலாவின் அக்காள் மகனும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தனது மகளுக்கு பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனைத் திருமணம் பேசி முடித்துள்ளார்.

இந்தத் திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களின் முக்கியத் தலைகளான துளசி ஐயா வாண்டையாரும், சசிகலாவும் சம்மதித்திருப்பது இரண்டு தரப்பிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூண்டி வாண்டையாரின் குடும்பம் தஞ்சை ஜில்லாவில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம். துளசி ஐயா வாண்டையார் காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சையில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் இருந்தவர். அவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் தந்தை வழியில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக இருக்கிறார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆனார் சுதாகரன்

ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்! தவிக்கும் தொழிலாளிகள்!!

கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் வாண்டையார் அண்மையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக திடீரென நியமிக்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு தினகரன் தரப்பில் திருமணமும் உறுதி செய்யப்பட்டிருப்பது கூடுதல் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

துளசி ஐயா வாண்டையார் குடும்பத்துச் சம்பந்தம் என்றதும் தினகரன் உடனடியாக இதுகுறித்து சிறையில் இருக்கும் சித்தி சசிகலாவிடம் பேசியிருக்கிறார். அதற்கு அவர், “ஜாதகப் பொருத்தம் இருக்கிறதா என்று நம் தரப்பிலும் பார்த்துவிட்டுச் சொல். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தினகரனை உற்சாகப்படுத்தினாராம் சசிகலா.

சித்தி சம்மதம் சொன்ன பிறகு, ஜாதகப் பொருத்தம் அமோகமாக இருக்கவே, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார் தினகரன்.

இதையடுத்து நேற்று முன் தினம், புதுச்சேரி அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தினகரனில் பண்ணை வீட்டில் இரண்டு குடும்பமும் சந்தித்து திருமணத்தை உறுதி செய்தனர். இந்த நிகழ்வில் இரண்டு குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள்.

இது திருமண நிச்சயதார்த்தம் இல்லை. திருமண உறுதி செய்வது மட்டுமே. பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் பூவும், பொட்டும் வைத்து விடுவார்கள். அன்றிலிருந்து அந்தப் பெண் அவர்கள் வீட்டுப் பெண் என்பது அந்த குடும்பங்களில் வழக்கம். மற்றபடி சசிகலா விடுதலையாகி வந்த பிறகே நிச்சயதார்த்தம் இருக்கும் என்கிறார்கள்.

இதனிடையே வரும், செப்டம்பர் மாதத்தில் சசிகலா விடுதலையாவது உறுதி என அடித்துக் கூறும் அவரது விசுவாச வட்டத்தினர் , “சின்னம்மா வெளியில் வந்ததும் நடக்கும் முதல் சுப நிகழ்வாக இந்தத் திருமண நிச்சயதார்த்தம் இருக்கும். தை மாதத்தில் திருமணம் நடக்குமாம்” என்கிறார்கள்.

இரண்டு பெரிய குடும்பத்துத் திருமணம் என்பதால் திருமண விழாவை தஞ்சையே சிறக்க பிரம்மாண்டமாய் நடத்த வேண்டும் என்று இரண்டு தரப்பிலும் விரும்புகிறார்களாம். சசிகலா தலைமையில் நடத்தத் திட்டமிடப்படும் இந்தத் திருமணத்துக்க்கு அனைத்துக் கட்சியினரையும் அழைக்க முடிவெடுத்துள்ளனர். தான் சிறைக்குப் போனதால் சிதறிப்போன தனது குடும்பத்தின் செல்வாக்கை இதன் மூலம் மீண்டும் பெற்றுவிடலாம் என்பதும் சசிகலாவின் திட்டம் என்கிறார்கள்.

Previous Post

உலக சதுப்புநிலக்காடுகள் தினம்

Next Post

ராமர் கோயில் பூமி பூஜை – ஐடியா கொடுத்த முதல்வர்

Next Post

ராமர் கோயில் பூமி பூஜை - ஐடியா கொடுத்த முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

July 15, 2025

கொள்கைத் தலைவருக்கு மதியத்திற்கு மேல் மரியாதை!

July 15, 2025

சீமானின் பாஸ்போர்ட்; நீதிமன்றம் அதிரடி!

July 15, 2025

முதலமைச்சரின் பகல் கனவு!

July 15, 2025

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

July 15, 2025

உதயசந்திரன், ராஜேஷ்லக்கானி ஆஜராக உத்தரவு!

July 14, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version