மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மலையின் காரணமாக நடப்பு சீசனில் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
![மேற்குத்தொடர்ச்சிமலையில் பெய்யும் தொடர் மழையால் முழு கொள்ளளவினை எட்டிய குண்டாறு அணை!](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/kundaruu-dam-1.jpg?resize=960%2C540&ssl=1)
தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது மிகச்சிறிய அணையான குண்டாறு அணை.36.10 அடி உயரமுள்ள இந்த அணை தொடர் மழை பெய்தால் நிரம்பக்கூடும். அந்த வகையில் இந்த ஆண்டு மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நடப்பு சீசனில் குண்டாறு அணை தற்போது முழு கொள்ளளவினை எட்டியுள்ளது.
இந்த அணையில் 25000 கன அடி வரை தண்ணீர் சேமித்து வைக்கலாம். மேலும் இதன் மூலம் 1100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.