தமிழக அரசு எடுத்துள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. கோவில் திருவிழா மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை போன்ற முக்கிய கட்டுப்பாடுகளும் அதில் இடம்பெற்று இருந்தது.
இந்தநிலையில், இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நாடுமுழுவதும் கொரோனா பரவலின் 2 ம் அலை வேகமாக பரவ தொடங்கி வருகிறது. இது இந்தியாவிற்கு கடுமையான சுகாதார நெருக்கடி காலம் அதை மக்கள் எதிர்கொள்ள வேண்டும்.
Read more – மத்தியபிரேதசத்தில் 60 மணிநேர முழு ஊரடங்கு… அமலாகிறது இன்று மாலை 6 மணி முதல்…
அதேபோல், தமிழகத்திலும் இந்த தாக்கம் தீவிரமாகி வருவதால் அனைத்து மக்களும் கட்டாயமாக முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தம் செய்துகொள்ளுங்கள் என்றார்.
மேலும், தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை பாதுகாப்பது நம் கடமை. நமது நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். அதனால் 45 வயது மற்றும் அதை கடந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.