தமிழக அரசில் போதுமான நிதியே இல்லை என்கிற போது மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமா? என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அருகே 137 அடியில் ₹39 கோடியில் பேனா நினைவுச்சின்னம் (கருணாநிதி பயன்படுத்திய பேனா) அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்து இபிஎஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ போதுமான நிதியே இல்லாதபோது மெரினாவில் ₹80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா? ₹80 கோடிக்கு 6.5 கோடி மக்களுக்கும் இலவசமாக பேனா வாங்கி கொடுத்து விடலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.