தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மக்கள் திமுகவை நிராகரிப்பார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி:
பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகிறது.
கிராமங்கள், விவசாய குடும்பங்களின் முன்னேற்றம் மட்டுமே நாட்டின் வளத்தை உயர்த்தும்.இதன் அடிப்படையில் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.ஆனால்,இந்த சட்டத்தை திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன? வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
Read more-டெல்லி விவசாயிகள் போராட்டம் : இன்று தொடர் உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஈடுபடப்போவதாக தகவல்
இந்த எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை எளிதில் யாரும் நம்ப வேண்டாம். அதிமுகவை நிராகரிப்போம் என்ற நோக்கில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ள திமுகவை மக்கள் 234 தொகுதிகளிலும் நிராகரிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.