குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு இன்று 75வது பிறந்தநாள். இதையடுத்து, அவருக்கு பிரதமர் மோடி உள்பட நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வர் வாழ்த்து :
அவர் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டிற்கு மேலும் சேவையாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். பிறந்தநாளுக்கு உங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் வாழ்த்து:
மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடியரசுத் தலைவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், குடியரசுத்தலைவருக்கு எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து நாட்டிற்கு சேவை செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.