கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராமங்களில் கிராம சபைக்கூட்டம் கூடி மக்களின் நிறை குறைகள் பற்றி பேசி முடிவெடுக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தினால் கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக கூறி கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீது 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக, முக கவசத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்திருந்தனர்.