
இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஃபர்கான் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். தற்போது சென்னை சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சபினா, மகள்கள் சனா மற்றும் யமீனா உள்ளிட்டோர் சொந்த ஊரிலேயே இருந்தனர்.
இந்நிலையில் சபீனா தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இறந்துபோனவர்களின் உடல்களை உடனடியாக கைப்பற்றிய அவர்கள், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறப்பதற்கு முன்னதாக சபீனா எழுதி வைத்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தேன். நான் இறந்துபோனால் என்னுடைய மகள்கள் தனியாக இருப்பார்கள். அதனால் அவர்களையும் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று கடிதத்தில் சபீனா எழுதி வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பழனி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.