தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்த விருப்பப்பட்டால் ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்த விருப்பப்பட்டால் ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையிலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்த விருப்பப்பட்டால் ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் மருத்துவம் படிக்க 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 405 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 26.12.2020!!!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட இருப்பதால் மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்றார். மேலும், அவர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா ? என்ற கேள்விக்கு முதல்வரிடம் இதுகுறித்து கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.