வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொருட்கள் வாங்குவதிலிறுந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.
இந்த விலக்கு தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் ஆணையர் சஜ்ஜன் சிங் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கல் அலுவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், “சரிபார்ப்பு இயந்திரத்தில் கைரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே ரேசன்பொருள் தரப்படும் என்ற முறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைக்கு சென்று பொருள் வாங்க முடியாதோர் அங்கீகார சான்றைப் பூர்த்திச் செய்து அளிக்க வேண்டும். கோரிக்கைப் பெறப்பட்ட அன்றே அங்கீகார சான்றை கடைப்பணியாளர் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் சேர்க்க வேண்டும். அங்கீகாரச் சான்றில் குறிப்பிடப்படும் நபர் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் பெறலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.