பெங்களூரு சிறையில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகு அதனை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது அதில் நான்கு பேரும் நிரபராதிகள் என்று உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது இதனை எதிர்த்து கர்நாடக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை மேல்முறையீடு செய்தது மீண்டும் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஏற்கனவே வழங்கிய நான்கு ஆண்டு தண்டனை செல்லும் என்றும் மற்றும் அபராதமும் கட்டவேண்டும் என்றும் புதிய தீர்ப்பை வழங்கினார் இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலும் தனது வேலையை காட்டிய சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசாக வாழ்வதாகும் அடிக்கடி வெளியில் சென்று வருவதாகும் தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது .
இதனிடையே,சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் சசிகலா பரோலில் வெளி வந்து மீண்டும் சிறைக்கு சென்றார்.
இப்போது நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடிவதற்கு முன்னதாகவே அவரை சிறையில் இருந்து கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .இதை பெங்களூர் சிறை நிர்வாகம் முற்றிலும் மறுத்தது. தற்போது சிறையிலுள்ள சசிகலாவுக்கு இதுபோன்ற விதிமுறை பொருந்தாது . அவர் தண்டனை காலம் முழுவதும் அடைந்த பின்பே வெளியேற்றப்படுவார் என்று கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார்.
இதனிடையே கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் சசிகலா எப்போது விடுதலை ஆவார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறைத்துறை இடம் கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு பதிலளிக்கும் வண்ணம் கர்நாடக சிறைத்துறை ஒரு கைதியின் விடுதலை என்பது பல்வேறுசட்ட விதிகளுக்கு கட்டப்பட்டுள்ளது அதுவும் சசிகலா போன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை மற்றும் ஏற்கனவே அவர்கள் அபராதத் தொகையையும் செலுத்தி உள்ளதால் அதனை எல்லாம் கணக்கில் கொண்டு விடுதலை தேதியை மாற்றி அமைக்கப்படலாம் எனவே இதுபோன்ற தகவலை நாங்கள் இப்போது வெளியிட முடியாது என்று சிறைத்துறை தெரிவித்திருக்கிறது
இந்த நிலையில் முன்னரே ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதெல்லாம் இல்லை என்று கர்நாடக சிறைத்துறை ஏற்கனவே அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
தற்போது மீண்டும் வரும் 28ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என செய்தி வெளியாகியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதில் சசிகலாவை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இமெயில் அனுப்பியதாகவும் கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
இதனிடையே தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் சர்ச்சை கிளம்பியுள்ளது அதற்கான காரணம் இதுதான் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது எனவேதான் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக யாரும் தனிப்பட்ட முறையில் இனிமேல் அறிக்கை தெரிவிக்க கூடாது அப்படி அதனை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்
இதே நேரத்தில் நேரத்தில் சசிகலா தற்போது வெளியில் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு அவர் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறுகிறது. அந்த நேரத்தில்தான் வெளியே வருவார் என்கிறது மன்னார்குடி வட்டாரம். ஆனால் என்னமோ சின்னம்மாவின் விடுதலை மட்டும் தற்போது வரை புலி வருது புலி வருது கதையாகத்தான் உள்ளது .