தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.
கல்லூரி, பள்ளிகளை நவம்பர் 16-ம் தேதி திறக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 2-வது வாரத்தில் பெற்றோரிடம் கலந்து ஆலோசனை நடத்தித் திறக்கலாம் என அரசு அறிவித்தது. இந்நிலையில் பெற்றோர், பள்ளி நிர்வாகிகள் ஆகியோருடன் அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “பள்ளிகளை திறப்பது குறித்து வரும் 12-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்
45% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் செருப்புகள் தயாராக உள்ளன.
வரும் 12-ம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகே ஆன்லைன் கிளாஸ் அல்லது டிவி மூலம் கல்வி வழங்கப்படும்” என்றார் அமைச்சர்.