அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கிராஸ் பார் என்ற பம்பர் கம்பிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கிராஸ் பார் என்ற பம்பர் கம்பிகளை உடனடியாக நீக்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 10 ம் தேதி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், அரசு மற்றும் மிக முக்கிய நபர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் கிராஸ் பார் என்ற பம்பர் கம்பிகளை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் மனுவாக விளக்கமாக குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்தது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ‘கிராஸ் பார்’ என்ற கம்பிகளை வாகனங்களில் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52 ம் பிரிவுக்கு முரணாக உள்ளது. இதனால் பம்பர் பொறுத்தப்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும். இதையும் மீறி அங்கீகாரமற்ற இதுபோன்ற கிராஸ் பார் கம்பிகளை பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Read more – மத்திய பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு : மத்திய அரசு திட்டம்
மேலும், அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கிராஸ் பார் என்ற பம்பர் கம்பிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.