கமல்ஹாசன் சொல்லும் நல்லவர்கள் அதிமுகவினர் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டசபையில் ஒலிக்கும். எங்கள் கட்சி நல்லவர்களுடன் கூட்டணி வைக்கும. பல கட்சிகளில் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனம் நொந்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கே வரவேண்டும். கூட்டணி பற்றி இப்போது பேசும் நேரமல்ல” என்றார்.இந்நிலையில் சென்னையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “பாஜகவின் வேல் யாத்திரைக்கு இதுவரை யாரும் அனுமதி வழங்கவில்லை.
நடிகர் கமல்ஹாசன் நேற்று பேட்டியளிக்கும்போது நல்லவர்களுடன் கூட்டணி வைப்பேன் என்றார். கமல்ஹாசன் சொல்லும் ஒரே நல்லவர்கள் அதிமுகவினர்தான்.
பாஜகவுடன் கூட்டணியில் ஒற்றுமையாக உள்ளோம்; அதில் எந்த மாறுபாடும் இல்லை” என்றார்.